செல்போன் ஆபத்து: அந்தரங்க தகவல்கள் திருடப்படலாம்!

போன்களால் நமக்கு பலவகை ஆபத்துகளும் ஏற்படுகின்றன. குறிப்பாக நாம் செல்போன் வைத்திருக்கும் பல வகை அந்தரங்க தகவல்கள் திருடப்படுவதாக கூறப்படுகிறது.
செல்போன் இன்று உலகம் முழுவதும் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. செல்போன் இல்லாதவர்களே இல்லை என்ற நிலையை நோக்கி தற்போது சென்று கொண்டிருக்கிறது. அதுவும் பல்வேறு வசதிகளையும் கொண்ட ஸ்மார்ட் போன்களுக்கு பெரும்பாலானோர் மாறி விட்டனர். ஆனால், இந்த போன்களால் நமக்கு பலவகை ஆபத்துகளும் ஏற்படுகின்றன. குறிப்பாக நாம் செல்போன் வைத்திருக்கும் பல வகை அந்தரங்க தகவல்கள் திருடப்படுவதாக கூறப்படுகிறது.
போனில் எந்த ஒரு செயல்பாட்டையும் மேற்கொள்வதற்கு ஆண்ட்ராய்டு பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிளின் ஆப் ஸ்டோருக்கோ சென்று செயலிகளை பதிவிறக்கம் செய்கிறோம். பயன்படுத்தும் செயலியை இன்ஸ்டால் செய்வதற்கு முன் அது கேட்கும் அனுமதிகளை பார்த்தீர்களானால் அதிர்ச்சியடைய நேரிடும்.
உதாரணமாக, புகைப்படத்தை எடிட் செய்யும் ஒரு பிரபல செயலியை இன்ஸ்டால் செய்வதாக வைத்து கொள்வோம். அப்போது கேமரா, தொடர்பு எண்கள், லொகேஷன், ஸ்டோரேஜ் போன்றபலவற்றிற்கு அனுமதி அளித்தால்தான் அந்த செயலியை செயல்படுத்த முடியும். ஆனால், புகைப்படத்தை எடிட் செய்யும் இந்த செயலிக்கு, புகைப்படம், தொடர்பு எண்கள், ஸ்டோரேஜ் ஆகியவை அவசியம்தான். ஆனால், முற்றிலும் தேவையற்ற லொகேஷன், இருப்பிடத்தை கண்டறிந்து அதன் மூலம் மிகச்சரியான விளம்பரங்களை உங்களது போனுக்கு அனுப்பி பணம் சம்பாதிப்பதற்காக அனுமதி கேட்கப்படுகிறது.
- Previous வவுனியாவில் பாரிய மோசடி அம்பலம்! நடந்தது என்ன தெரியுமா ??
- Next தமிழ் ஊடகவியலாளர்களைச் சந்தித்து பேரம் பேசிய மகிந்த..!!!
You may also like...
Sorry - Comments are closed